வளவ. துரையன்/சிரிப்பு

8-4-24 இணைய வழிக் கவியரங்கில் வாசித்த கவிதை.

என் அம்மா அதிகமாகச் சிரிக்க மாட்டார்.

அவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை.

தொலைக்காட்சி நகைச்சுவைகள்
அவருக்குத் துளி கூடச் சிரிப்பை வரவழைக்காது.

தமிழ்நாட்டின் எந்தச் சிரிப்பு நடிகரும் அவரிடம் வெற்றி பெற்றதே இல்லை.

என் அப்பா மிகவும் சத்தம் போட்டுச் சிரிப்பார். என்
அண்ணனோ எப்பொழுதும்
புன்சிரிப்புதான்.

அக்காவோ ஆடிக்கொண்டே
சிரிப்பாள்.

தாங்க இயலாமல் ஒரு முறை கேட்டதற்கு

அம்மா சொன்னார்
“நான்தான் சிரிப்பா சிரிக்கறனே
போதாதா?