வளவ. துரையன் கவிதை/நீ அறிவாய்

நிறங்களின் அடிமையாகிவிடாதே.
உன்னுள்ளே பல வண்ணங்கள்
குமைந்து கிடக்கின்றன.
சிவப்பும் கருமையும் மஞ்சளும்
நீலமும் பகிர்ந்து வைத்துள்ளாய்
குருவிக்குக் கூடு கட்டலும்
கறையானுக்குப் புற்றமைத்தலும்
தனித்திறமைகள்தாம்.
அதுபோல்
ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு
வகையில் உன்னை வசப்படுத்துகின்றன.
எல்லாமே தேவைதான் இருந்தாலும் கவனம் தேவை.
உன்னையே நீ அறிவா