அழகியசிங்கர்/நிழல்

நிழலுடன் பேசுகிறேன்
நான் என்றேன்

அப்படிச் சொல்லாதே
என்றது நிழல்
என்னை ஏன் தடுக்கிறாய்
என்றேன்

அதுதான் பிரச்சினை
என்றது நிழல்

மனிதன் தன்னைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருக்கிறான்

அவன்
சேர்த்து வைத்தப் பணம்
சேர்த்து வைத்தப் புகழ்
எல்லாம் மாயை
என்று தெரிவதில்லை

ஆனால் புரியாமல்
உற்சாகமாய் இருக்கிறான்

நிழல்
அவனுக்குப் பாடம்
புகட்டுகிறது

ஆனால்
அவனுக்குப்
புரியவில்லை!