ம.சக்திவேலாயுதம்/சித்திரை மகளே வா..

வெந்து சாகும்
வெயிலின் வெட்கை தணித்து
இதமாய் தவழும்
தென்றலின் வேட்கை தெளித்து
சித்திரையே வா..

வைகையில் அழகர் இறங்கும்
கண்கொள்ளா காட்சியைக்காண
உன் வருகையை எண்ணி
மனம் துடித்து அழைக்கிறது
சித்திரையே வா..

பகிர்வென்னும் நற்குணங்கள்
மனமெல்லாம் மேலோங்க
நாளும் எல்லோருக்கும்
பரிசில் வழங்கி மகிழ்ந்திருக்க
சித்திரையே வா..

சுற்றத்தோடும் உறவுகளோடும்
அன்பு அளவளாவ..
வேப்பம்பச்சடியின் இன்சுவையாய்
வாழ்க்கை இனித்திருக்க
சித்தரையே வா..

ஒரு விரல் புரட்சியும்
கை நீட்டா கிளர்ச்சியும்
ஜனநாயக மலர்ச்சியுமாக
சித்திரையே
தமிழ் முத்திரையாய் வா..

நாடும் நாளும் செழிக்க
மண்ணும் மனமும் சிரிக்க
எல்லோரும் இனிக்க
குரோதமற்ற குரோதியாய்
படர்ந்து வா பறந்து வா!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்