எஸ்ஸார்சி /மத அரசியல்

மதங்கள் கடவுளோடு
நிற்பதில்லை
அவை எப்போதும்
எல்லை தாண்டுகின்றன
மதங்கள் சும்மா இருப்பதில்லை
மதங்கள் மண்ணை
கூறு போடுகின்றன
கடவுள் ஆன்ம விஷயமாய்
நிற்பதில்லை
மதங்களுக்கு எப்போதும்
அரசியல் உண்டு
காசையும் கடவுளையும்
பிரித்துவிட்டால்
நிலமை சீரடையலாம்
எந்தக் கடவுளாலும்
நடக்கிற காரியமில்லையே அது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன