“புத்தக தினம் ” /சுரேஷ் ராஜகோபால்

தினம் தினம் படிப்பவர்க்கு
தனியாக புத்தக தினம் எதற்கு?
நாமெல்லாம் தினம் படிப்பவரில்லையே
இது நமக்கானது புத்தகம் தொடுவோம். 1

பெருமையோடு புத்தகம்
எடுத்து படித்து கொண்டாடுவோம்
படிப்பது பெருமைக்குரியது
பெருமையோடு படிப்போம். 2

படிப்பது சிந்தனையை தூண்டும்
வாழ்வில் சிந்தித்து செயல்பட உதவும்
படிப்பது நம்மை மேம்படுத்தும்
மேம்பட்டு வாழ்வோம் வரும்நாளில் 3

இனியொரு விதி செய்வோம்
அதை எந்தநாளும் காப்போம்
தனியொருவனுக்கு புத்தகமில்லை
என்ற நிலையை மாற்றுவோம். 4

சுரேஷ் ராஜகோபால்,
சிட்லபாக்கம்,
23 04 2024 மாலை 05.20

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன