சுரேஷ் ராஜகோபால்,/ “உதாசீன உண்மைகள் “

எரியும் மெழுகில் ஒளிரும் ஒளி
திரியும் மெழுகும் அழிந்தே தரும் ஒளி
கரியும் விறகும் உணவினை ஆக்கும்
கரியும் விறகும் கனன்றே போகும். .

கீழ்வானில் அதிகாலை விடிவெள்ளி முளைக்கும்
தாழ்வான எண்ணங்கள் மனிதனை அழிக்கும்
கூழைக் கும்பிடு போட்டு நடிக்கும்
பாழாய்ப்போன மனது கடந்து துடிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன