25 04 2024
“அவன் புலம்பினான்,”
அவன் புலம்பினான்,
எத்தனை துரோகங்கள்
கண்டு துவண்டு போனேன்
அது அவன் வாழ்வைச் சிதைத்தது. 1
அருகில் வந்து அமர்ந்தவுடன்
புலம்பித் தீர்த்தான்
“சாதிக்க வேண்டும்
உன்னத நிலையை அடைய வேண்டும். 2
வழிகள் சொல்லுங்கள் குருவே
கைகூப்பி கேட்டான்
எதிரில் அமர்ந்தவன்
தடுமாறித்தான் போனான். 3
குருயென்று சொல்லப்பட்டவன்
அவன் எதிரில் வைத்திருந்த
தேநீரை ரசித்துக் கொண்டிருந்தான்
காலம் நம் கையிலேயில்லை. 4
குரு என்றவன் யோசனையோ எங்கேயோ
அவன் கையில் தேநீர் கோப்பை
ரசித்து ருசித்து குடித்தான்
யார் கவலைக்கும் மருந்தில்லை அவனிடம். 5
26 04 2024
“குளத்தில் மலர்கள்”
சேற்றில் காலையில் சிரிக்கும் செந்தாமரை…
இரவில் அழகாகச் சிரிக்கும் அல்லி
சேறான குளத்தைச்
சிறப்பாக அலங்கரிக்கும். 1
அழகாக மொட்டுடனே காத்திருக்கும்
சரியான சமயத்தில் மலர்ந்து சிரிக்கும்
நீர் வாழ் மீன்களும் புழுக்களும்
சர்வ சுதந்திரமாகச் சுற்றி வரும். 2
இலையும் மலரும்
அசைந்து ஆடிக்கொண்டே
அந்த குளக்கரையில்
ஆனந்தம் கொடுக்கும். 3
சூரிய உதயமும் சூரிய மறைதலும்
தான் கொண்டிருந்த துயில் கலைக்க
மெதுவாக விரித்தது தன்னிதழ்களை
மலர்ந்தது தாமரை மலர் மட்டுமல்ல
அல்லியும் கூடத்தான். 4
பார்ப்பவர் மனது
மகிழ்ச்சியில் துள்ள
அழகு அள்ளிச்சென்றது
மீனோ துள்ளிச் சென்றது. 5
சுரேஷ் ராஜகோபால்,
சிட்லபாக்கம்,
Arumai !🙇♀️🙇♀️🙏
நன்றி கவிஞரே