கம்பனைக் காண்போம்—9

வளவ. துரையன்

                              

                         மேக வள்ளல்கள்                   

                 புள்ளி மால்வரை பொன்என நோக்கி வான்
    வெள்ளிவீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்
    உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயுமவ்
    வள்ளியோரின் வழங்கின மேகமே                 [16]

[புள்ளி வரை=இமயமலை; தாரை=மழைத்தாரை; உள்ளி=உணர்ந்து; வள்ளியோர்=வள்ளல்கள்]

பொன்மயமான இமயமலைமேல் வானமானது வெள்ளிக் கம்பிகள் போல மழைத்தாரைகளைப் பொழிந்தது. பிறருக்குக் கொடுப்பதே சிறந்தது என உணர்ந்த வள்ளல்கள் தம்மிடம் உள்ள எல்லாப்பொருள்களையும் மகிழ்ச்சியோடு அள்ளித் தருவது போல மேகம் மழை பொழிந்தது எனக் கம்பன் உவமை கூறுகிறான்.