எஸ் வி வேணுகோபாலன்/தடம்


கறுத்த பேரழகி
கடைக் கண் சிமிட்டியவள்
காத்திருந்த போது போக்கு காட்டி
ஏய்த்து விட்டுத்
தூங்கு மட்டும் காத்திருந்து

உறக்க நேரத்தில்
வீதி நிறைய
குதியாட்டம் பேயாட்டம்
போட்டதற்குத்
தடம் நிறைய
விட்டும் போயிருந்தாள்
விடியலில் எழுந்து பார்க்கையில்….