(இணையத்தில் படித்தது. பகவான் ரமணர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் )
புண்ணிய பாபங்கள் போக எளிய வழி
பகவான் ஒரு கோடைக்காலத்தில் மாலை நேரம் காற்றோட்டமாக ரமணாஷ்ரமம் கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் . அன்பர்கள் தொலைதூரத்தில் தெரியும் அருணை மலை அழகை அவர் விவரிப்பதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு அன்பர் அவர் முன்னே தோன்றினார். அவர் முகம் அழுது அழுது சிவந்திருந்தது. "பகவானே, நான் மகா பாபி . எனக்கு விடிவே இல்லையா ?" "யாருப்பா நீ ? ஏன் அழறே ?" "பகவானே , நீங்களும் என்னைக் கைவிட்டா நான் எங்கே போவேன்?" "நான் உன்னைப் பார்த்ததே இல்லையேப்பா . நான் என்ன உன் குருவா ? உன்னைக் கரையேத்தறதா சொன்னேனா ?" "என்னைக் காப்பாத்துங்க பகவான் . நீங்க ஏத்துக்காட்டாலும் நீங்க தான் என் குரு. " "சரி . அப்ப என் குரு தட்சணை எங்கே ?" "நான் என்ன தர முடியும் குருநாதா . நீங்க எதையும் ஏத்துக்க மாட்டீங்களே " "அப்படின்னு உன்கிட்ட சொன்னேனா?" "பகவானே நீங்க என்ன கேட்டாலும் தரேன் " "அப்ப சரி. நீ இதுவரை செஞ்ச புண்யமெல்லாம் எனக்குக் கொடு " "நா மருந்துக்குக் கூட புண்ணியம் செய்யலையே பகவான் " "தர்றியா இல்லையா?" "எப்படித் தர்றது குருதேவா?" "நான் மனசார நான் செஞ்ச புண்ணியமெல்லாம் பகவானுக்குக் கொடுத்துட்டேன்னு சொல்லு " வந்தவர் சொல்றார். "சரி . இப்ப நீ செஞ்ச பாபமெல்லாம் கொடு" "அபச்சாரம் குருதேவா. குரு சாபம் வரும். நான் இந்த ஜென்மால செஞ்சதெல்லாம் பாபம் தான் " "குரு தானே கேட்கறேன். கொடு " "பகவான். நெஜமாத்தான் கேக்கறீங்களா?" "ஆமாம் " வந்தவர் மனசாரக் கொடுக்கிறார். "சரி. நீ இப்ப புது மனுஷன். உன்கிட்ட புண்ணியமும் இல்லை . பாபமும் இல்லை. சந்தோஷமா போ " அவர் போனார். அதுவே அவரை மற்றவர்கள் பார்த்த கடைசி தடவை .
One Comment on “தொகுப்பு : ஸ்ரீதர் சாமா/ஒரு ஆன்மிக சிந்தனை”
அருமை