
புத்தாண்டு
மத்தாப்பூ கொளுத்தி
அத்தானென இழுத்துப்
பஞ்சணையைப் சரண்புகுந்து
பஞ்சாமிர்தத்தில் விரல்விட்டாள்
மஞ்சுளா.
ஐயையோ!
அச்சமென்பதில்லையோ
இப்பெண்களுக்கு?
விரலில் தேள்கொட்ட
விறலி பிடித்தால்
விரண்டுவிடுமோ விடம்?
பஞ்சபூதங்கள் பொங்கப்
பஞ்சாமிர்தம் பொங்கிற்று
மஞ்சுளாவின் நெஞ்சில்.
