ஷண்முக சுப்பையா/மேற்கத்தியோரே!

ஒரு பக்கம்
வாழ வழி வகுக்கும்
மறுபக்கம்
சாகக் குழிபறிக்கும்
உங்களைப் போலல்ல
நாங்கள்.
நாங்களோ
வாழவும் விரும்பமாட்டோம்
சாகவும் துணிய மாட்டோம்.
உங்களைப் போலல்ல
நாங்கள்.
வாழாமல் வாழ்ந்து
சாகாமற் சாகும்
நாங்கள் நாங்களே.