ரயிலிலும் யாருமில்லை

நகுலன்

1.

ரயிலை விட்டிறங்கியதும்

ஸ்டேஷனில் யாருமில்லை

அப்பொழுதுதான்

அவன் கவனித்தான்

ரயிலிலும் யாருமில்லை

என்பதை;

” அது ஸ்டேஷன் இல்லை “

என்று நம்புவதிலிருந்து

அவனால் அவனை

விடுவித்துக் கொள்ள

முடியவில்லை

ஏனென்றால்

ஸ்டேஷன் இருந்தது