புனிதஜோதி கவிதை

எல்லா கணக்கும்
சரியாகத்தான்
போடப்படுகிறது
எப்படி வருகிறது
பிழை?

எப்போது
புயல் வருமென
புலப்படுவதில்லை
காற்றுக்கு

உள்ளங்கையை விட
சிறிய மனம்
என்னசெய்யும்
அந்நாளில்

வெயிலின்
வெம்மையை
இறக்கி வைத்து
படம் வரையும்
நிழல்
ஒரு கண்ணீர்துளி