ஷண்முக சுப்பையா/துறவி

பட்டப்பகலிலே
பரந்த உலகிலே
என்னென்னவோ
கண்டேன்
எதுவும் என்னை
கவரவில்லை
ஏது நான்
சற்றுத் துறந்த
முனிவனாய்
விட்டேனோ என
ஐயுற்றேன்.
அந்த நான்
நடுநிசியிலே
இடுங்கிய அறையிலே
மூலையிலோர்
குகை கண்டேன்
கண்டதும் நான்
முற்றத் துறந்த
முனிவனாய்
முழுமூச்சுடன்
தவத்திலாழ்ந்தேன்.