ஷண்முக சுப்பையா/கண்ணாடி
முகம் பார்க்கும் கண்ணாடிமூன்றுண்டுஎன் வீட்டில்.மூன்றில் பார்த்தாலும்முகம்தான் தெரியவில்லை;அகம் தான் தெரிகிறது.
>>முகம் பார்க்கும் கண்ணாடிமூன்றுண்டுஎன் வீட்டில்.மூன்றில் பார்த்தாலும்முகம்தான் தெரியவில்லை;அகம் தான் தெரிகிறது.
>>பால்காராபால்காராகோபக்காரப் பால்காராபாப்பாவிற்கும் பால்தரும்பாவம் பசுவைஅடிக்காதே.பால்காராபால்காராகோபக்காரப் பால்காராகன்றிற்குக் கொடுக்காமல்காய்ச்சிக் குடிக்காமல்கறந்தெடுத்த பாலையெல்லாம்நீவிற்றிடுவதெதற்கோ?
>>பொல்லாப் பேர்வழிஎவனோ ஒருவன்அப்பா தலையில்அடித் தேற்பித்தசெல்லாக் காசை“செல்லப் பயலேசெலவாக்கடா”என்றெனக்குத் தந்தார்.மிட்டாய் தின்னஆசைப்பட்டுகாசை எடுத்துகடைக்குச் சென்றேன்,கடைக்காரன்கெட்டிக்காரன்காசை எடுத்துத்தட்டிப் பார்த்துகள்ளப் பயலேமெள்ளப் போடாஅடுத்த கடைக்கு”என்றென் தோளைத் தட்டிதள்ளி விட்டான்.கூனிக் குறுகிவெளியே வந்தால்சோனிப் பயலொருவன்அஞ்சு பைசாகெஞ்சிக் கேட்டான்.அஞ்சென்னஐயஞ்சு இருபத்தஞ்சுஇந்தா பிடிஎன்றத் துட்டைவிட்டெறிந்துவிட்டுவீட்டை நோக்கிஓட்டம் பிடித்தேன்.
>>அந்தக் குச்சுநாய்ஒரு எச்சி நாய்அச்சுதன்என் மச்சினன்அவன் ஒருமிருக வைத்தியன்அதையெடுத்துவளர்த்தினான்.அன்றதைஎச்சி நாயெனப்புச்சினார்இன்றதைசாதி நாயெனமெச்சுவார்அது நிச்சயம்.
>>ரொட்டி தின்ன ஆசைதான்துட்டுக்கெங்கே போக நான்அம்மையை விட்டுஅப்பாவிடம் கேட்டுதுட்டு வாங்கு முன்னேரொட்டிக்காரன் சண்டிமீட்டிடுவான் கம்பி
>>சரியானசக்தி கிடைத்தால்பக்தன் நான்ஒரு பரம சிவனாய்மாறிடுவேன்.
>>பாரப்பா பார்!அதோ ஓர்பச்சைக்கார்அது பொப்பப்போபோடாமல்போவதெங்கேசொல்லப்பா.
>>நாய்க்காட்சிநானும் பார்த்தேன்நன்றாயிருந்தது.பார்த்து விட்டுவெளியே வந்தால்இளவெடுத்தஎச்சிநாய்க் கூட்டம்.
>>பத்துப் பைசாதுட்டொன்றுபாதையில் எங்கேனும்கிடக்காதாவென்றுபாதையிலே கண்ணாகபட்டணத்தைச்சுற்றி வந்தேன்.கண்கள் களைத்திடவே*’ கடவுளே உனக்குக்கண்ணுண்டா?’என்றுகேள்வி ஒன்றைவிட்டெறியவட்ட வடிவமாய்கால் ரூபாய் துட்டொன்றுபதிந்த பால் நுரைபோல்ஒழிந்த ஒரு மூலையிலேஒளிவிடக் கண்டேன்.உண்டுண்டுகடவுளுக்குநிச்சயமாய்கண்ணுண்டு”என்றென்னுள்ளத்தேஉளறி விட்டுமெள்ள மெள்ளஅத்துட்டண்டை சென்றால்துட்டு துட்டல்லதுப்பலெனக் கண்டேன்.
>>பச்சை மண்ணடுப்புஅதன் வாயில்பழுத்த மட்டைஇருந்தெரியசட்டி யொன்றில்கருவாடு சிலபொரிந்தனவேஅதைத் தின்னகருவாடு சிலவெளியே வேறுகாய்ந்தனவே.
>>தலையைச் சொறி!நாக்கைக் கடி!பல்லை இளி!முதுகை வளை !கையைக் கட்டு/காலைச் சேர்!என்ன இது?வயிற்றைக் கேள்.சொல்லுமது.
>>என்னைப் பொறுத்தவரையில்நீஎன்ன வேண்டுமானாலும்செய்எனக்கதில்எள்ளளவும்எதிர்ப்பில்லை.ஏன்!கழுத்தை வேண்டுமானாலும்அறு.ஆனால்அறுத்துவிட்டுபுத்தரெனப்புன்முறுவல் பூத்திடாதேஎன்றுமட்டும்சொல்லிடுவேன்.
>>அம்மா விட்டராக்கற்றுஅப்பா கிட்டபோயிற்று;அவர் கொடுத்தபிக்கற்றுஅத்தனையும்முழுங்கி விட்டுஅம்மாவிடமேதிரும்பிற்று.
>>அப்பா அடித்தால்அம்மை அணைப்பாள்.அம்மை அடித்தால்அப்பா அணைப்பார்.இருவரும் அடித்தால்யாரென்னை அணைப்பார்.
>>விண்ணகமேவிண்ணகத்துச்சந்திரனேசூரியனேஎண்ணமிலாதாரா பதங்களே!மண்ணுக்காய்விண் விண்ணென்றுவீணேமண்ணைப்புண்ணாக்கும்மண்ணகத்தார்மண்ணின் இருப்பிடமும்விண்ணகத்தே தானென்றுஏனோ எண்ணுகிலார்.
>>மரமே மரமேமாமரமே!நீவிண்ணை நோக்கிவிரைந்தாலும்மண்ணே உனக்குஆதாரம்.மற்றதெலாமேமறுபட்சம்.
>>கணிதத்தில் நான் பூஜ்யம்.குணத்தில் நான் நிர்குணன்.மரங்களில் நான் அரசமரம்மிருகங்களில் நான் பசு.லோகங்களில் நான் இரும்பு.படிகளில் நான் பதினெட்டாம் படி.அடிகளில் நான் காலடி.பானங்களில் நான் மதுபானம்.வாகனங்களில் நான் சைக்கிள்.வேதங்களில் நான் வேதாந்தம்.வாதங்களில் நான் மௌனம்.மலைகளில் நான் சபரிமலை.கலைகளில் நான் விபசாரக் கலை.
>>விண் ஒரு பெண்.மண் ஒரு ஆண்.விண் எரித்தால்மண் எரியும்.விண் சிரித்தால்மண் சிரிக்கும். விண் ஒரு பெண்.விண்ணை நினைத்து வீணே மனத்தைப் புண்ணாக்காதே.
>>பருப்பில்லா பாதாம் கொட்டை;செத்த படிமங்களின்செதுக்கிய சவக்கல்லறைதேய்ந்த கருத்துக் கத்தியைதீட்டும்தோய்ந்த சாணைக்கல்சட்டக் கூடு.
>>பருப்பில்லா பாதாம் கொட்டை;செத்த படிமங்களின்செதுக்கிய சவக்கல்லறைதேய்ந்த கருத்துக் கத்தியைதீட்டும்தோய்ந்த சாணைக்கல்சட்டக் கூடு.
>>கால மழை வந்திடசாலைச்சிறார்சிலர் கூடிகாகிதக் கப்பல்பல செய்துகட்டெறும்பு சிலதைப்பிடித்தவைதனில்அடைத்துசாக்கடை நீரில்ஒழுகவிட்டுஅவை போகிற போக்கைப் பார்த்துஉவகை மிக்குடையராகிகூக்குரலிட்டுக்கூத்தாடினரே
>>காலையில் எழுந்துகடனை முடித்துபாடம் படித்துஉணவருந்திபள்ளி சென்றுகற்பன கற்றுதிரும்பி வந்துஆடிக்களித்துவீடு சென்றுபாடம் படித்துதுயின்றிடசென்றேன்.என்றுஎன்றும்இதுவேஎழுதுவதென்றால்எழுதுவதெதற்கோநாட்குறிப்பு.
>>ஆத்ம சுருதி மீட்டிஐம்புலனும் அதிலொடுங்கஅபூர்வ ராகத்தில்அபூர்வ தாளத்தில்அன்று நீதெருவில் நின்றுபாடிய பாட்டை நான்மறைவில் நின்றுகேட்டேன்.நின்பாட்டு முடியஎன் ஆத்ம சுருதி குலையஅவ்விடம் விட்டகன்றேன்.
>>சாகாப் பழமையைசாகடிக்கும்பாவிகளே!பிறவாப் புதுமையின்பிறப்பறுக்கும்பாவிகளே!உங்கள்இருதரப்பார்க்கும்இடையேஅகப்பட்டஅப்பாவிகள்நாங்கள்எத்தனை காலம்ஒப்பாரி வைத்துஅழுது தொலைப்போம்.
>>கறுகறு வென்றுஒரு பறவையுண்டுகண்டால் நீ அதைகாகமென்றேகூறிடுவாய்.என்றாலதுகாகாவென்றுகத்திடாமல்கூகூவென்றுகூவிடுமேல்அது குயிலென்றேநீ தேர்ந்திடுவாய்.
>>கவிதை பிறக்ககருவுற வேண்டிகட்டிலொன்றில்மெத்தை விரித்துகற்பனைக்காகக்காத்துக் கிடந்தேன்.வெளியேயாரோ ஒருத்தியாரிடமோ‘கருவிலே சிதைந்ததுமுதற் குழந்தைஇறந்து பிறந்ததுஇரண்டாவது குழந்தைபிறந்ததும் இறந்ததுமூன்றாவது குழந்தைஇப்பொழுது நான்கருவுற்றிருக்கிறேன்அது என்னாகுமோ?என்னையும்கொண்டு தான் போகுமோ?கண்டுதான்தெரிய வேண்டும்”என்று ஏனோஒப்பாரி வைத்துஓலமிட்டாள்.கேட்ட நான்வந்த கற்பனையைவிரட்டிவிட்டுநிம்மதியாய்தூங்கி விட்டேன். ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி – விருட்சம் நாளிதழ்
>>பெட்டைக் கோழிமுட்டையிடும்!சேவற்கோழிஎன்ன செய்யும்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாது.ஒருவருக்கும் தெரியாது. ஷண்முக சுப்பையா/திருடர்கள் – விருட்சம் நாளிதழ் ஷண்முக சுப்பையா/படம் – விருட்சம் நாளிதழ் ஷண்முக சுப்பையா/அமரன் – விருட்சம் நாளிதழ்
>>திருடன் ஒருவன்குருடன் வீட்டில்திருடப் போனான்.முடிந்த மட்டும்திருடிவிட்டுதிரும்பிவந்துதிருட்டுப் பொருளைஎடுத்துப் பார்த்தால்எல்லாம்திருடன் வீட்டில்திருட்டுப் போனதிருட்டுப் பொருள்.
>>பூத்துக் குலுங்கும்மாமரங்களேஉங்களில் சிலதேன்காய்த்துக் கனிகள்ஈவதில்லை!ஏய்த்துப் பிழைத்திடும்வித்தை அதுவெனில்அவைதனைவெட்டி வீழ்த்திடும் நாள்வெகு தூரத்திலிலை.
>>அம்மா அம்மாஅந்தச் செம்மறி ஆடுசும்மா சும்மாமுட்டிட வருது.கொம்பின்னும் முளைக்கவில்லைஆயினும் அதற்குதெம்பிற்கொரு குறைவுமில்லை.குட்டி ஆடதுஎன்ன பாடு படுத்துது.ஆதலாலேஅம்மா நீயேஅதன் உடையவர் யாரோஅவரிடம் உடனேஅதைக் கட்டிடச் சொல்லு.இல்லாவிட்டால்இனிநான்போகவே மாட்டேன்.வெளியே.
>>குழந்தை வண்ண வண்ண மலரி லெல்லாம்வந்தமரும்வண்ணத்துப்பூச்சிஉன் பட்டுமேனியைத்தொட்டுப் பார்க்கஒட்டி வந்தால்எட்டிப் போவதேன்வண்ணத்துப்பூச்சி ! வண்ணத்துப்பூச்சி புழுதியான புழுதியெல்லாம்அளைந்துவரும்குழந்தையேஉன் அருமந்தக் கரங்களால்என் உருவையே மாற்றிடுவாய்ஒருவேளைஎன் உயிரையே எடுத்திடுவாய்ஆதலாலேஎன் அருமந்தக் குழந்தையேஎன்னை நீஎட்டிநின்றே பார்த்திடுவாய்என் அழகையெல்லாம்பருகிடுவாய். ஷண்முக சுப்பையா/வாழ்க்கை – விருட்சம் நாளிதழ்
>>பந்தல் கட்டிபடரவிட்டேன்கொடியொன்றை நான்.அதுபடர்ந்து பந்தளித்துகாயொன்றை ஈன்றிடஆனந்தம் மேலிட்டுவளையவளைய வந்தேன்அதைச் சுற்றி.வந்ததுதான்மிச்சம் எனும்படிபந்தலதுவும்படுத்ததொருநாள்.அதைஎப்பாடு பட்டேனும்எடுத்து நிறுத்திடலாம்என்றாலோஎல்லாம் ஒரே சிக்கல்அதனால்எப்படியோ போகட்டும்என்றிப் பொழுதுஎன்பாட்டிற்குஅதன் மூட்டில்என்னால் முடிந்தமட்டும்நீரை மட்டும்கொட்டுகின்றேன்.
>>மாமியார் தாளத்திற்குமாமனார்ஆடுவாரேல்நீ உன்மனைவியார்தாளத்திற்குமரியாதையாய்ஆடிடுவாய்.ஆடாவிட்டால்மாமியாரும்மனைவியாரும்தெருவில் நின்றுஆடுவார்நீ தாளம்போடுவாய்.
>>கண்ணே நீகண்ணாடிமுன் நின்றுகாலத்தை ஏன்வீணாக்குகின்றாய்.நித்தம் நிதம்நீ நின்நெற்றிக்கிட்டபொட்டாகண்ணுக்குத் தீட்டியமையாஉதட்டிற்குப் பூசியசாயமாமுகத்திற்குத் தடவியதூளாஇல்லைஇதுபோன்றஇன்ன பிறவாஎன்னை இச்சிறுகால அளவில்(அறுதியிட்டுக் கூறினால்அரைக்கால்நூற்றாண்டில்)கால் குசேலனாக்கியவை?இல்லையென்றுனக்குநன்றாய்த் தெரியுமேபின் எதற்குஎன் கண்ணே நீகண்ணாடிமுன் நின்றுகாலத்தை ஏன்வீணாக்குகின்றாய்.
>>அழகான அளவானசெருப்பென்றால்அது கடிக்கத்தான் செய்யும்கடித்துக் கடித்துக்கடித்த இடமெல்லாம்காய்த்திட ஒருநாள்கடிப்பின் கடுமைதெரியாதாகும்.அதுவரைக்கும்பொறுக்கும் பொறுமைஉனக்கிலதாயின்பஞ்சுத் தோலால்பதப்படுத்தியசெருப்பணிந்துநடந்திட வேண்டியதே.அதற்குனக்குபோக்கில்லையெனில்பழம் செருப்புநாடிசென்றிடுவாயே.
>>காதல் பிறந்துகண் அடையஓடிப்போய்நான் அவளைகைப் பிடித்தேன்.காலிட்டடிக்கஞானம் பிறந்துகண் திறக்கநான் அவளைகைவிட்டுஓடிப் போயிடதலையிட்டுடைத்தேன்.திறந்த கண்திரும்பவுமடையஎன்ன பிறந்ததுஎன்று நான் பார்க்க,கண்ணடைத்துக்கண் திறந்தஇடை வேளையிற்பிறந்த இருகண்களே காரணம்எனக் கண்டேன்.
>>“தாயைப் பார்த்துபெண்ணையெடு”என்பது ஓர்பழமொழி.“தவறதுதந்தையைப் பார்த்துபெண்ணையெடு”என்கிறான் ஓர்அநுபவசாலி.எது சரி?எது தவறு?என்று தெரியஎடுத்தோரைஅடுத்துக் கேட்டால்ஏதேதோஉளறுகிறார்!அறியும் வழிஅதுவன்றிபிறிதொன்றுஇல்லையே !பின் என் செய்ய?தாயைப் பார்த்தொன்றுதந்தையைப் பார்த்தொன்றுஎன இரண்டு கொள்ளவா?
>>பட்டப்பகலிலேபரந்த உலகிலேஎன்னென்னவோகண்டேன்எதுவும் என்னைகவரவில்லைஏது நான்சற்றுத் துறந்தமுனிவனாய்விட்டேனோ எனஐயுற்றேன்.அந்த நான்நடுநிசியிலேஇடுங்கிய அறையிலேமூலையிலோர்குகை கண்டேன்கண்டதும் நான்முற்றத் துறந்தமுனிவனாய்முழுமூச்சுடன்தவத்திலாழ்ந்தேன்.
>>இன்பம் தருவதுதரத்தான் செய்தாள்இல்லையென்றுசொல்ல நான்வேதாந்தி ஒன்றுமல்ல.ஆனால் அது “ஒருவழிப் போக்குவரத்தா?”
>>அப்பா! சிவனே!எனை ஆண்டவனே!அடுத்த பிறவியில் நான்பெண்ணாய் பிறந்திட வேண்டும்என் மனைவியும் அதுபோல்ஆணாய் பிறந்திட வேண்டும்அவ்வாறு பிறந்த அவளுக்கு நான்எவ்வாறெனினும்வாழ்க்கைப்பட்டிட வேண்டும்.பட்டு நான் அவள் உயிரைஎடுக்காமல் எடுத்திடவும் வேண்டும்.
>>என்னைக் கண்டால்அவள் பனிக்கட்டிஅவனைக் கண்டால்அவள் தங்கக் கட்டிஅவன் பெரும்பணப்பெட்டிநான் வெறும்தோற் பெட்டிஎல்லாம் ஒரேமண்ணாங்கட்டி
>>உனக்கும் பசிக்கும்அதுஎனக்கும் தெரியும்எனினும்யாரோ படைத்தபடைப்பைஏதோ கிடைத்ததுஎன்றுநீ விழுங்கிடவிழைந்தால்விபரீதங்கள் பலவிளைந்திடலாம்இவ்வென் கூற்றுக்குஆதாரம்எதுவேனும் வேண்டுமெனில்விழுங்கிவிட்டுவிழிக்கின்ற எனைவந்துபார்த்திடலாம்.
>>கடற்கரை யெல்லாம்சர்க்கரையென்றுகண்டவரெல்லாம்சொன்னார்கள்.சொன்னதைக் கேட்டுசுப்பென்றோனும்அப்பென்றோனும்அதைப் பார்த்திடவேசென்றார்கள்.சென்றவர் வந்துகடற்கரையெல்லாம்சர்க்கரையேகடல் நீர் மட்டும்உப்பென்றார்!
>>ஒஹோ எனக்குஎல்லாமாயிற்றுஆண்டவன் அருளால்குழந்தைகளும்இரண்டுண்டுயார் செய்த புண்ணியமோஇரண்டும் ஆண்களேபின் என்ன ?எனக்கு வாதம்அவளுக்குக் காசம்பாவம்மூத்தவனுக்குஏதோ பாலாரிஷ்டம்இளையவனுக்குஇதுவரைக்கும்ஒன்றுமில்லைஇனி என்னவோ ?எல்லாவற்றிற்கும் மேலாகநான் ஓர் குமாஸ்தாஎன்ன போதுமாஇல்லை இன்னும்தெரிய வேண்டுமா.
>>எட்டுக்காலி ஒன்றுதட்டின் மேலிருந்துஓடோடி வந்துகட்டிலடி சென்றுபதுங்கிடுதல் கண்டேன்.அப்படியாவென்றுஅடுத்த அறை சென்றுவிளக்குமாறு ஒன்றுஎடுத்து வந்து பார்த்தால்எங்குமதைக் காணோம்.
>>நிழலில் நிற்கும்செடியைப் பார்த்தாயா!நீநிழலில் நிற்கும்செடியைப் பார்த்தாயா!அதுவெயிலை நோக்கிதலையை நீட்டும்பாட்டைப் பார்த்தாயா!நீபாட்டைப் பார்த்தாயா!பார்த்த பின்னும்நிழலைத் தேடிநீபோவதேனய்யோ?நீபோவதேனய்யோ?நிழலிலேநிற்கும் செடிசீராய் வளராது.சீராய் வளர்ந்தாலும்அதுநேராய் வளராது.மேலும்அதற்குஎழிலென்பதுசிறிது மிருக்காது.ஆகையால்நீவெயிலிலே வளர்ந்து விடு.வளர்ந்துவிட்டுநிழலைக்கொடுத்து விடு.
>>தந்தை தன் பாதியைவிட்டுச் சென்றார்நான் என் பாதியைகொண்டு வந்தேன்.பாதியும் பாதியும்கொஞ்சிக் குலாவிடசமகாந்த முனைகளவைஎவ்விதம்எதிர்காந்த முனைகளாய்மாறின என்று நான்எண்ணத்தில் ஆழுமுன்னேஅவைசமகாந்த முனைகளாய் மாறினவே!மாறியது மாறியதே.
>>அணைக்க ஒருஅன்பில்லா மனைவி.வளர்க்க இருநோயுற்ற சேய்கள்.வசிக்கச் சற்றும்வசதியில்லா வீடு.உண்ண என்றும்உருசியில்லா உணவு.பிழைக்க ஒருபிடிப்பில்லாத் தொழில்.எல்லாமாகியும்ஏனோ உலகம்கசக்கவில்லை
>>