ஷண்முக சுப்பையா/பால்காரன்

பால்காராபால்காராகோபக்காரப் பால்காராபாப்பாவிற்கும் பால்தரும்பாவம் பசுவைஅடிக்காதே.பால்காராபால்காராகோபக்காரப் பால்காராகன்றிற்குக் கொடுக்காமல்காய்ச்சிக் குடிக்காமல்கறந்தெடுத்த பாலையெல்லாம்நீவிற்றிடுவதெதற்கோ?

>>

ஷண்முக சுப்பையா/செல்லாக் காசு

பொல்லாப் பேர்வழிஎவனோ ஒருவன்அப்பா தலையில்அடித் தேற்பித்தசெல்லாக் காசை“செல்லப் பயலேசெலவாக்கடா”என்றெனக்குத் தந்தார்.மிட்டாய் தின்னஆசைப்பட்டுகாசை எடுத்துகடைக்குச் சென்றேன்,கடைக்காரன்கெட்டிக்காரன்காசை எடுத்துத்தட்டிப் பார்த்துகள்ளப் பயலேமெள்ளப் போடாஅடுத்த கடைக்கு”என்றென் தோளைத் தட்டிதள்ளி விட்டான்.கூனிக் குறுகிவெளியே வந்தால்சோனிப் பயலொருவன்அஞ்சு பைசாகெஞ்சிக் கேட்டான்.அஞ்சென்னஐயஞ்சு இருபத்தஞ்சுஇந்தா பிடிஎன்றத் துட்டைவிட்டெறிந்துவிட்டுவீட்டை நோக்கிஓட்டம் பிடித்தேன்.

>>

ஷண்முக சுப்பையா/குச்சு நாய்

அந்தக் குச்சுநாய்ஒரு எச்சி நாய்அச்சுதன்என் மச்சினன்அவன் ஒருமிருக வைத்தியன்அதையெடுத்துவளர்த்தினான்.அன்றதைஎச்சி நாயெனப்புச்சினார்இன்றதைசாதி நாயெனமெச்சுவார்அது நிச்சயம்.

>>

ஷண்முக சுப்பையா/ரொட்டிக்காரன்

ரொட்டி தின்ன ஆசைதான்துட்டுக்கெங்கே போக நான்அம்மையை விட்டுஅப்பாவிடம் கேட்டுதுட்டு வாங்கு முன்னேரொட்டிக்காரன் சண்டிமீட்டிடுவான் கம்பி

>>

ஷண்முக சுப்பையா/துட்டு

பத்துப் பைசாதுட்டொன்றுபாதையில் எங்கேனும்கிடக்காதாவென்றுபாதையிலே கண்ணாகபட்டணத்தைச்சுற்றி வந்தேன்.கண்கள் களைத்திடவே*’ கடவுளே உனக்குக்கண்ணுண்டா?’என்றுகேள்வி ஒன்றைவிட்டெறியவட்ட வடிவமாய்கால் ரூபாய் துட்டொன்றுபதிந்த பால் நுரைபோல்ஒழிந்த ஒரு மூலையிலேஒளிவிடக் கண்டேன்.உண்டுண்டுகடவுளுக்குநிச்சயமாய்கண்ணுண்டு”என்றென்னுள்ளத்தேஉளறி விட்டுமெள்ள மெள்ளஅத்துட்டண்டை சென்றால்துட்டு துட்டல்லதுப்பலெனக் கண்டேன்.

>>

ஷண்முக சுப்பையா/கருவாடு

பச்சை மண்ணடுப்புஅதன் வாயில்பழுத்த மட்டைஇருந்தெரியசட்டி யொன்றில்கருவாடு சிலபொரிந்தனவேஅதைத் தின்னகருவாடு சிலவெளியே வேறுகாய்ந்தனவே.

>>

ஷண்முக சுப்பையா/எதிர்ப்பு

என்னைப் பொறுத்தவரையில்நீஎன்ன வேண்டுமானாலும்செய்எனக்கதில்எள்ளளவும்எதிர்ப்பில்லை.ஏன்!கழுத்தை வேண்டுமானாலும்அறு.ஆனால்அறுத்துவிட்டுபுத்தரெனப்புன்முறுவல் பூத்திடாதேஎன்றுமட்டும்சொல்லிடுவேன்.

>>

ஷண்முக சுப்பையா/மண்

விண்ணகமேவிண்ணகத்துச்சந்திரனேசூரியனேஎண்ணமிலாதாரா பதங்களே!மண்ணுக்காய்விண் விண்ணென்றுவீணேமண்ணைப்புண்ணாக்கும்மண்ணகத்தார்மண்ணின் இருப்பிடமும்விண்ணகத்தே தானென்றுஏனோ எண்ணுகிலார்.

>>

ஷண்முக சுப்பையா/பூஜ்யம்

கணிதத்தில் நான் பூஜ்யம்.குணத்தில் நான் நிர்குணன்.மரங்களில் நான் அரசமரம்மிருகங்களில் நான் பசு.லோகங்களில் நான் இரும்பு.படிகளில் நான் பதினெட்டாம் படி.அடிகளில் நான் காலடி.பானங்களில் நான் மதுபானம்.வாகனங்களில் நான் சைக்கிள்.வேதங்களில் நான் வேதாந்தம்.வாதங்களில் நான் மௌனம்.மலைகளில் நான் சபரிமலை.கலைகளில் நான் விபசாரக் கலை.

>>

ஷண்முக சுப்பையா/விண்

விண் ஒரு பெண்.மண் ஒரு ஆண்.விண் எரித்தால்மண் எரியும்.விண் சிரித்தால்மண் சிரிக்கும். விண் ஒரு பெண்.விண்ணை நினைத்து வீணே மனத்தைப் புண்ணாக்காதே.

>>

ஷண்முக சுப்பையா/கொட்டைத் தோட்டிற்குள் ஒரு விமர்சனம்

பருப்பில்லா பாதாம் கொட்டை;செத்த படிமங்களின்செதுக்கிய சவக்கல்லறைதேய்ந்த கருத்துக் கத்தியைதீட்டும்தோய்ந்த சாணைக்கல்சட்டக் கூடு.

>>

ஷண்முக சுப்பையா/கொட்டைத் தோட்டிற்குள் ஒரு விமர்சனம்

பருப்பில்லா பாதாம் கொட்டை;செத்த படிமங்களின்செதுக்கிய சவக்கல்லறைதேய்ந்த கருத்துக் கத்தியைதீட்டும்தோய்ந்த சாணைக்கல்சட்டக் கூடு.

>>

ஷண்முக சுப்பையா/கப்பல்

கால மழை வந்திடசாலைச்சிறார்சிலர் கூடிகாகிதக் கப்பல்பல செய்துகட்டெறும்பு சிலதைப்பிடித்தவைதனில்அடைத்துசாக்கடை நீரில்ஒழுகவிட்டுஅவை போகிற போக்கைப் பார்த்துஉவகை மிக்குடையராகிகூக்குரலிட்டுக்கூத்தாடினரே

>>

ஷண்முக சுப்பையா/நாட்குறிப்பு

காலையில் எழுந்துகடனை முடித்துபாடம் படித்துஉணவருந்திபள்ளி சென்றுகற்பன கற்றுதிரும்பி வந்துஆடிக்களித்துவீடு சென்றுபாடம் படித்துதுயின்றிடசென்றேன்.என்றுஎன்றும்இதுவேஎழுதுவதென்றால்எழுதுவதெதற்கோநாட்குறிப்பு.

>>

ஷண்முக சுப்பையா/தெருப்பாடகன்

ஆத்ம சுருதி மீட்டிஐம்புலனும் அதிலொடுங்கஅபூர்வ ராகத்தில்அபூர்வ தாளத்தில்அன்று நீதெருவில் நின்றுபாடிய பாட்டை நான்மறைவில் நின்றுகேட்டேன்.நின்பாட்டு முடியஎன் ஆத்ம சுருதி குலையஅவ்விடம் விட்டகன்றேன்.

>>

ஷண்முக சுப்பையா/பாவிகள்

சாகாப் பழமையைசாகடிக்கும்பாவிகளே!பிறவாப் புதுமையின்பிறப்பறுக்கும்பாவிகளே!உங்கள்இருதரப்பார்க்கும்இடையேஅகப்பட்டஅப்பாவிகள்நாங்கள்எத்தனை காலம்ஒப்பாரி வைத்துஅழுது தொலைப்போம்.

>>

ஷண்முக சுப்பையா/கறுத்த பறவை

கறுகறு வென்றுஒரு பறவையுண்டுகண்டால் நீ அதைகாகமென்றேகூறிடுவாய்.என்றாலதுகாகாவென்றுகத்திடாமல்கூகூவென்றுகூவிடுமேல்அது குயிலென்றேநீ தேர்ந்திடுவாய்.

>>

ஷண்முக சுப்பையா/கரு

கவிதை பிறக்ககருவுற வேண்டிகட்டிலொன்றில்மெத்தை விரித்துகற்பனைக்காகக்காத்துக் கிடந்தேன்.வெளியேயாரோ ஒருத்தியாரிடமோ‘கருவிலே சிதைந்ததுமுதற் குழந்தைஇறந்து பிறந்ததுஇரண்டாவது குழந்தைபிறந்ததும் இறந்ததுமூன்றாவது குழந்தைஇப்பொழுது நான்கருவுற்றிருக்கிறேன்அது என்னாகுமோ?என்னையும்கொண்டு தான் போகுமோ?கண்டுதான்தெரிய வேண்டும்”என்று ஏனோஒப்பாரி வைத்துஓலமிட்டாள்.கேட்ட நான்வந்த கற்பனையைவிரட்டிவிட்டுநிம்மதியாய்தூங்கி விட்டேன். ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி – விருட்சம் நாளிதழ்

>>

ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி

பெட்டைக் கோழிமுட்டையிடும்!சேவற்கோழிஎன்ன செய்யும்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாது.ஒருவருக்கும் தெரியாது. ஷண்முக சுப்பையா/திருடர்கள் – விருட்சம் நாளிதழ் ஷண்முக சுப்பையா/படம் – விருட்சம் நாளிதழ் ஷண்முக சுப்பையா/அமரன் – விருட்சம் நாளிதழ்

>>

ஷண்முக சுப்பையா/திருடர்கள்

திருடன் ஒருவன்குருடன் வீட்டில்திருடப் போனான்.முடிந்த மட்டும்திருடிவிட்டுதிரும்பிவந்துதிருட்டுப் பொருளைஎடுத்துப் பார்த்தால்எல்லாம்திருடன் வீட்டில்திருட்டுப் போனதிருட்டுப் பொருள்.

>>

ஷண்முக சுப்பையா/வித்தை

பூத்துக் குலுங்கும்மாமரங்களேஉங்களில் சிலதேன்காய்த்துக் கனிகள்ஈவதில்லை!ஏய்த்துப் பிழைத்திடும்வித்தை அதுவெனில்அவைதனைவெட்டி வீழ்த்திடும் நாள்வெகு தூரத்திலிலை.

>>

ஷண்முக சுப்பையா/செம்மறி ஆடு

அம்மா அம்மாஅந்தச் செம்மறி ஆடுசும்மா சும்மாமுட்டிட வருது.கொம்பின்னும் முளைக்கவில்லைஆயினும் அதற்குதெம்பிற்கொரு குறைவுமில்லை.குட்டி ஆடதுஎன்ன பாடு படுத்துது.ஆதலாலேஅம்மா நீயேஅதன் உடையவர் யாரோஅவரிடம் உடனேஅதைக் கட்டிடச் சொல்லு.இல்லாவிட்டால்இனிநான்போகவே மாட்டேன்.வெளியே.

>>

ஷண்முக சுப்பையா/அழகு

குழந்தை வண்ண வண்ண மலரி லெல்லாம்வந்தமரும்வண்ணத்துப்பூச்சிஉன் பட்டுமேனியைத்தொட்டுப் பார்க்கஒட்டி வந்தால்எட்டிப் போவதேன்வண்ணத்துப்பூச்சி ! வண்ணத்துப்பூச்சி புழுதியான புழுதியெல்லாம்அளைந்துவரும்குழந்தையேஉன் அருமந்தக் கரங்களால்என் உருவையே மாற்றிடுவாய்ஒருவேளைஎன் உயிரையே எடுத்திடுவாய்ஆதலாலேஎன் அருமந்தக் குழந்தையேஎன்னை நீஎட்டிநின்றே பார்த்திடுவாய்என் அழகையெல்லாம்பருகிடுவாய். ஷண்முக சுப்பையா/வாழ்க்கை – விருட்சம் நாளிதழ்

>>

ஷண்முக சுப்பையா/வாழ்க்கை

பந்தல் கட்டிபடரவிட்டேன்கொடியொன்றை நான்.அதுபடர்ந்து பந்தளித்துகாயொன்றை ஈன்றிடஆனந்தம் மேலிட்டுவளையவளைய வந்தேன்அதைச் சுற்றி.வந்ததுதான்மிச்சம் எனும்படிபந்தலதுவும்படுத்ததொருநாள்.அதைஎப்பாடு பட்டேனும்எடுத்து நிறுத்திடலாம்என்றாலோஎல்லாம் ஒரே சிக்கல்அதனால்எப்படியோ போகட்டும்என்றிப் பொழுதுஎன்பாட்டிற்குஅதன் மூட்டில்என்னால் முடிந்தமட்டும்நீரை மட்டும்கொட்டுகின்றேன்.

>>

ஷண்முக சுப்பையா/தாளம்

மாமியார் தாளத்திற்குமாமனார்ஆடுவாரேல்நீ உன்மனைவியார்தாளத்திற்குமரியாதையாய்ஆடிடுவாய்.ஆடாவிட்டால்மாமியாரும்மனைவியாரும்தெருவில் நின்றுஆடுவார்நீ தாளம்போடுவாய்.

>>

ஷண்முக சுப்பையா/கண்ணே நீ

கண்ணே நீகண்ணாடிமுன் நின்றுகாலத்தை ஏன்வீணாக்குகின்றாய்.நித்தம் நிதம்நீ நின்நெற்றிக்கிட்டபொட்டாகண்ணுக்குத் தீட்டியமையாஉதட்டிற்குப் பூசியசாயமாமுகத்திற்குத் தடவியதூளாஇல்லைஇதுபோன்றஇன்ன பிறவாஎன்னை இச்சிறுகால அளவில்(அறுதியிட்டுக் கூறினால்அரைக்கால்நூற்றாண்டில்)கால் குசேலனாக்கியவை?இல்லையென்றுனக்குநன்றாய்த் தெரியுமேபின் எதற்குஎன் கண்ணே நீகண்ணாடிமுன் நின்றுகாலத்தை ஏன்வீணாக்குகின்றாய்.

>>

ஷண்முக சுப்பையா/செருப்பு

அழகான அளவானசெருப்பென்றால்அது கடிக்கத்தான் செய்யும்கடித்துக் கடித்துக்கடித்த இடமெல்லாம்காய்த்திட ஒருநாள்கடிப்பின் கடுமைதெரியாதாகும்.அதுவரைக்கும்பொறுக்கும் பொறுமைஉனக்கிலதாயின்பஞ்சுத் தோலால்பதப்படுத்தியசெருப்பணிந்துநடந்திட வேண்டியதே.அதற்குனக்குபோக்கில்லையெனில்பழம் செருப்புநாடிசென்றிடுவாயே.

>>

ஷண்முக சுப்பையா/கண்கள்

காதல் பிறந்துகண் அடையஓடிப்போய்நான் அவளைகைப் பிடித்தேன்.காலிட்டடிக்கஞானம் பிறந்துகண் திறக்கநான் அவளைகைவிட்டுஓடிப் போயிடதலையிட்டுடைத்தேன்.திறந்த கண்திரும்பவுமடையஎன்ன பிறந்ததுஎன்று நான் பார்க்க,கண்ணடைத்துக்கண் திறந்தஇடை வேளையிற்பிறந்த இருகண்களே காரணம்எனக் கண்டேன்.

>>

ஷண்முக சுப்பையா/பெண் கொள்ளல்

“தாயைப் பார்த்துபெண்ணையெடு”என்பது ஓர்பழமொழி.“தவறதுதந்தையைப் பார்த்துபெண்ணையெடு”என்கிறான் ஓர்அநுபவசாலி.எது சரி?எது தவறு?என்று தெரியஎடுத்தோரைஅடுத்துக் கேட்டால்ஏதேதோஉளறுகிறார்!அறியும் வழிஅதுவன்றிபிறிதொன்றுஇல்லையே !பின் என் செய்ய?தாயைப் பார்த்தொன்றுதந்தையைப் பார்த்தொன்றுஎன இரண்டு கொள்ளவா?

>>

ஷண்முக சுப்பையா/துறவி

பட்டப்பகலிலேபரந்த உலகிலேஎன்னென்னவோகண்டேன்எதுவும் என்னைகவரவில்லைஏது நான்சற்றுத் துறந்தமுனிவனாய்விட்டேனோ எனஐயுற்றேன்.அந்த நான்நடுநிசியிலேஇடுங்கிய அறையிலேமூலையிலோர்குகை கண்டேன்கண்டதும் நான்முற்றத் துறந்தமுனிவனாய்முழுமூச்சுடன்தவத்திலாழ்ந்தேன்.

>>

ஷண்முக சுப்பையா/ஒரு பிரார்த்தனை

அப்பா! சிவனே!எனை ஆண்டவனே!அடுத்த பிறவியில் நான்பெண்ணாய் பிறந்திட வேண்டும்என் மனைவியும் அதுபோல்ஆணாய் பிறந்திட வேண்டும்அவ்வாறு பிறந்த அவளுக்கு நான்எவ்வாறெனினும்வாழ்க்கைப்பட்டிட வேண்டும்.பட்டு நான் அவள் உயிரைஎடுக்காமல் எடுத்திடவும் வேண்டும்.

>>

ஷண்முக சுப்பையா/மண்ணாங்கட்டி

என்னைக் கண்டால்அவள் பனிக்கட்டிஅவனைக் கண்டால்அவள் தங்கக் கட்டிஅவன் பெரும்பணப்பெட்டிநான் வெறும்தோற் பெட்டிஎல்லாம் ஒரேமண்ணாங்கட்டி

>>

ஷண்முக சுப்பையா/பசி

உனக்கும் பசிக்கும்அதுஎனக்கும் தெரியும்எனினும்யாரோ படைத்தபடைப்பைஏதோ கிடைத்ததுஎன்றுநீ விழுங்கிடவிழைந்தால்விபரீதங்கள் பலவிளைந்திடலாம்இவ்வென் கூற்றுக்குஆதாரம்எதுவேனும் வேண்டுமெனில்விழுங்கிவிட்டுவிழிக்கின்ற எனைவந்துபார்த்திடலாம்.

>>

ஷண்முக சுப்பையா/கடற்கரை

கடற்கரை யெல்லாம்சர்க்கரையென்றுகண்டவரெல்லாம்சொன்னார்கள்.சொன்னதைக் கேட்டுசுப்பென்றோனும்அப்பென்றோனும்அதைப் பார்த்திடவேசென்றார்கள்.சென்றவர் வந்துகடற்கரையெல்லாம்சர்க்கரையேகடல் நீர் மட்டும்உப்பென்றார்!

>>

ஷண்முக சுப்பையா/குசலம் கேட்டால்

ஒஹோ எனக்குஎல்லாமாயிற்றுஆண்டவன் அருளால்குழந்தைகளும்இரண்டுண்டுயார் செய்த புண்ணியமோஇரண்டும் ஆண்களேபின் என்ன ?எனக்கு வாதம்அவளுக்குக் காசம்பாவம்மூத்தவனுக்குஏதோ பாலாரிஷ்டம்இளையவனுக்குஇதுவரைக்கும்ஒன்றுமில்லைஇனி என்னவோ ?எல்லாவற்றிற்கும் மேலாகநான் ஓர் குமாஸ்தாஎன்ன போதுமாஇல்லை இன்னும்தெரிய வேண்டுமா.

>>

ஷண்முக சுப்பையா/எட்டுக் காலி

எட்டுக்காலி ஒன்றுதட்டின் மேலிருந்துஓடோடி வந்துகட்டிலடி சென்றுபதுங்கிடுதல் கண்டேன்.அப்படியாவென்றுஅடுத்த அறை சென்றுவிளக்குமாறு ஒன்றுஎடுத்து வந்து பார்த்தால்எங்குமதைக் காணோம்.

>>

ஷண்முக சுப்பையா/செடி

நிழலில் நிற்கும்செடியைப் பார்த்தாயா!நீநிழலில் நிற்கும்செடியைப் பார்த்தாயா!அதுவெயிலை நோக்கிதலையை நீட்டும்பாட்டைப் பார்த்தாயா!நீபாட்டைப் பார்த்தாயா!பார்த்த பின்னும்நிழலைத் தேடிநீபோவதேனய்யோ?நீபோவதேனய்யோ?நிழலிலேநிற்கும் செடிசீராய் வளராது.சீராய் வளர்ந்தாலும்அதுநேராய் வளராது.மேலும்அதற்குஎழிலென்பதுசிறிது மிருக்காது.ஆகையால்நீவெயிலிலே வளர்ந்து விடு.வளர்ந்துவிட்டுநிழலைக்கொடுத்து விடு.

>>

ஷண்முக சுப்பையா/காந்த முனைகள்

தந்தை தன் பாதியைவிட்டுச் சென்றார்நான் என் பாதியைகொண்டு வந்தேன்.பாதியும் பாதியும்கொஞ்சிக் குலாவிடசமகாந்த முனைகளவைஎவ்விதம்எதிர்காந்த முனைகளாய்மாறின என்று நான்எண்ணத்தில் ஆழுமுன்னேஅவைசமகாந்த முனைகளாய் மாறினவே!மாறியது மாறியதே.

>>

ஷண்முக சுப்பையா/உலகம்

அணைக்க ஒருஅன்பில்லா மனைவி.வளர்க்க இருநோயுற்ற சேய்கள்.வசிக்கச் சற்றும்வசதியில்லா வீடு.உண்ண என்றும்உருசியில்லா உணவு.பிழைக்க ஒருபிடிப்பில்லாத் தொழில்.எல்லாமாகியும்ஏனோ உலகம்கசக்கவில்லை

>>