
அம்மா அம்மா
அந்தச் செம்மறி ஆடு
சும்மா சும்மா
முட்டிட வருது.
கொம்பின்னும் முளைக்கவில்லை
ஆயினும் அதற்கு
தெம்பிற்கொரு குறைவுமில்லை.
குட்டி ஆடது
என்ன பாடு படுத்துது.
ஆதலாலே
அம்மா நீயே
அதன் உடையவர் யாரோ
அவரிடம் உடனே
அதைக் கட்டிடச் சொல்லு.
இல்லாவிட்டால்
இனிநான்
போகவே மாட்டேன்.
வெளியே.

இதில் என்ன உள்ளது?