ஜோஸப் பிராட்ஸ்கி/வஸந்த கீதம்

பிரமிள் மொழிபெயர்ப்புக் கவிதை

இந்தக் குளிர்காலத்திலும் எனக்குப்
பைத்தியம் பிடிக்கவில்லை.
பூமியின் பசுமை எழுந்து
பனிக்கட்டிகளைச் சிதறடிக்கிறது.
எனவே இன்னும் நான் என்
புத்திசுவாதீனத்தை இழக்கவில்லை.
என்னை நானே
டஜன் கணக்குத் துகள்களாகப்
பிளந்துகொண்டிருக்கிறேன்.
என் மூளைமீது பனித்துகள் படிகிறது
மரங்களிடையே பனிபெய்கிறது
நமது அதிருப்திகளுக்கு
எல்லை இல்லை,ஆனால்
குளிர்காலங்களுக்கு முடிவு உண்டு.
நினவின் விருந்தாளியாக
கவிதை பிரவேசிக்கும்போதுதான்
உலகம் மாறுகிறது.