
**
காலையில்
எங்கள் கிராமத்தில்
சேவல் கூவி மக்கள் விழிப்பதில்லை!
ஆலமரக் கிளைகளில் நாளும் தொங்கும்
வௌவால்கள் கீச்சுக்குரல் கேட்டு
கண்கள் கசக்கி
எழுந்து விடுவார்கள்!
காலையில் கீச்சுக்குரல் எழுப்பிக் கொண்டே ஆலமரம் விட்டு
பறந்து செல்லும் வௌவால்கள் !
மாலையில் வாசல் இல்லா வீட்டை
பறந்து வந்து
ஆல மரக்கிளைகளில்
அமைதியாக தலைகீழாக தொ(தூ)ங்கும்!

மிகவும் நன்று