
அவன் தன்னையே வரைந்து கொண்டான். ஆனால் அது அவனில்லை என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.
அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் கிட்டத்தட்ட என்னைப் போல இருக்கிற ஒருவன்.
தலை முடி தாடை எல்லாம் வேற ஒருவர் மாதிரி இருந்தது.
அவனை எப்படி அழைப்பது? அண்ணா என்று அழைக்கலாமா தம்பி என்று அழைக்கலாமா என்று யோசித்தான்.
தம்பி என்றே அழை என்றது அந்தப் படம்.
திகைத்து உற்றுக் கவனித்தான் படத்தை.
