பி.ஆர்.கிரிஜா/தேவர் அருள்வார் தினம் !

1.

வானம் பொய்த்து நிலம் தரிசானாலும்

ஆளும் தலைவர் அநீதி இழைப்பினும்

அங்கங்கே வன்முறை தலை விரித்தாலும்

நல்லவர்கள் செய்யும் தர்ம சேவையால்

தேவர் அருள்வார் தினம் !


2.

வலிய உதவிக்கரம் நீட்டும் மனமிருந்தால்

பிற உயிர்களை நேசிக்கும் பண்பிருந்தால்

சினத்தைத் தவிர்த்து
அன்பை விதைத்தால்

தேவர் அருள்வார் தினம் !

3.

இயற்கையைப் பேணி இசைந்து
வாழ்ந்திடின்

போர் நிறுத்தி அமைதி காத்திடின்

தன்னலம் தவிர்த்து பொதுநலம்
விழைந்திடின்

தேவர் அருள்வார் தினம் !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன