சசிகலா விஸ்வநாதன்/வரலக்ஷ்மி வரம் அருள்வாயா



(1)
வேண்டும்; என்று வேண்ட ஒன்றுமில்லை!

வேண்டாது இருக்க முடியவும் இல்லை?

வேண்டுவது நீயே அறிந்து, பரிந்தருள்வாய்!

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்
🪷
(2)
சஞ்சல புத்தி அகன்றிட நான்

தஞ்சமென உன்னை நாடி அடைந்தேன்!

வஞ்சனை கொஞ்சமும் இன்றி எந்தனுக்கு,

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்
🪷
(3)
மிடி ஒன்றுமில்லாமல்
செந்தாமரை விட்டு,

என் மனத்தாமரை நீ குடிபுகுவாய்;

படிப்படியாக என் பழவினை அறுக்க,

வரலக்ஷ்மி வரம் தருவாய்.
🪷
(4)
செய்யும் செய்கைக்கு
உருவம் தா!

புரியும் வினைக்கு வெற்றி தா!

செய்யும் நோக்கத்திற்கு புகழ் தந்தே

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்
🪷
(5)
வருவதும் போவதும் உன் சித்தம்!

உன் விருப்பம் போலதே நடக்கட்டும்!

செல்வத் திருமகளுன் சித்தத்தில் நானுறைய

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன