பருவ கால பாரதி/நாகேந்திர பாரதி



ஆரம்பப் பள்ளியில்
பாடிய காலத்தில்
உற்சாகம் தெரிந்த
ஞாபகம்

உயர்நிலைப் பள்ளியில்
பாடிய காலத்தில்
காதல் தெரிந்த
ஞாபகம்

கல்லூரிப் பருவத்தில்
பாடிய காலத்தில்
கோபம் தெரிந்த
ஞாபகம்

வேலைப் பருவத்தில்
படித்த காலத்தில்
கடமை தெரிந்த
ஞாபகம்

ஓய்வுப் பருவத்தில்
படிக்கும் காலத்தில்
ஞானம் தெரியும்
நம்பிக்கை

முதுமைப் பருவத்தில்
படிக்கும் காலத்தில்
என்ன தெரியுமோ
யோசனை

2 Comments on “பருவ கால பாரதி/நாகேந்திர பாரதி”

Comments are closed.