22.12.2021 – புதன்
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: இந்த முறை புத்தகக் கண்காட்சி எப்படி இருக்கும்?
அழகியசிங்கர் : மோசமாகவிருக்கும்.
ஜெகன் : ஏன்?
மோகினி : அவநம்பிக்கையோடு இருக்காதீர்கள்.
அழகியசிங்கர் : அவநம்பிக்கை இல்லை. உண்மையைத்தான் சொல்கிறேன்.
மோகினி : கொரானா தொற்று தீவிரமடைந்து விடும் என்ற பயமா?
அழகியசிங்கர் : அதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஜெகன் : நீங்கள் அதிகமாகப் புத்தகம் கொண்டு வர வில்லையே?
அழகியசிங்கர்: ஆமாம்.
ஜெகன் :2019 ல் புத்தகக் காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களை நீங்கள் படிக்கவில்லை.
அழகியசிங்கர் :உண்மைதான்.அதனால் இந்த முறை எந்தப் புத்தகமும் வாங்க வேண்டாமென்று நினைக்கிறேன்.
மோகினி : இலக்கணத்துக்கா க இலக்கியமா? இலக்கியத்துக்காக இலக்கணமா?
ஜெகன் : சி.சு செல்லப்பா சொன்ன கருத்து அது.
மோகினி : உங்கள் கருத்தென்ன?
அழகியசிங்கர் : சி சு செல்லப்பா கூறினாலும் அதை நாம் பின்பற்ற முடியாது. அதே சமயம் தமிழாசிரியர் சொல்வது மாதிரியும் நாம் நடந்து கொள்ள முடியாது. எந்தப் புத்தகமும், பத்திரிகையும் தப்பில்லாமல் அச்சடிக்க முடியாது.
ஜெகன் : பெரிய முயற்சி செய்தால் இதெல்லாம் சாத்தியம்.
அழகியசிங்கர் : அந்தக் காலத்தில் க்ரியாவில் புத்தகம் அடிப்பார்கள். இரண்டு மூன்று பேர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்ப்பார்கள்.
மோகினி : நீங்க நடத்தும் கூட்டத்திற்கு என்ன அர்த்தம். அதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
அழகியசிங்கர் : பெரிதாக ஒன்றுமில்லை. கவிதை கூட்டமாக இருந்தாலும் கதைக் கூட்டமாக இருந்தாலும் நான் சிலர் பேர்களைப் படிக்க வைக்கிறேன். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. நானும் கூடவே படிக்கிறேன்.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
(எழுதியது இரவு 10.51)