ஏழு புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்/அழகியசிங்கர்

துளி – 236

இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு அவசரம் அவசரமாக 7 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  இன்னும் பல புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன.
ஒவ்வொரு புத்தகமாக அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

நகுலனின் சுருதி கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளேன்.
சுருதி கவிதைப் புத்தகத்தில்  நகுலனின் வித்தியாசமான  கவிதைகள்.  42 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.50. 

        பிற்பகலில்
        என் அறையில் 
        நான் தனியாக
        கூ கூ
        என்று குரல் கொடுக்கும்
        இந்தக் குயில்
        யாருக்கு
        எதைச் சொல்கிறது?