
சிறிய வெண் சங்குதான் வாசலில் தொங்குகிறது
கடலை சுமந்தபடி .
இரவானால் கொசுக்கள் உள்ளே அடைந்து கொள்ளும்
காதை பிளக்கும் ரீங்காரத்தில்
வேறு சப்தம் கேட்காது
நாட்பட நாட்பட
வெண் புள்ளிகள் மீது
ஒட்டடை வந்து படிந்து கொள்ளும்
சமயத்தில் குளவிகளின் வாசஸ்தலமாகி விடும்
பல காலமாய் கவனிப்பாரற்று கிடக்கும் அதனிடம்
காது கொடுத்தால் கிசுகிசுக்கும்
” இத்தனை காலம் தான் உயிர்த்திருப்பது
பழைய அலையின் சிறு தீண்டலுக்காகவே ” என்று …
