அழகியசிங்கர்
ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை
கட்டிடம்
அந்த உயரமான கட்டிடத்தை கீழேயிருந்து
பார்த்தபோது தலைச் சுற்றாமலில்லை.
18 மாடிகளைக் கடந்து மாடியின் உச்சிக்குப் போய்விட்டான்.
மாடியிலிருந்து கீழே பார்த்தான். பரபரப்பாக துளித்துளியாக மனிதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு இப்போது தோன்றியது. கீழே குதித்து விடலாமாவென்று.