வண்ணதாசன் கவிதை

அதிகாலைத் தேநீர்க் கடையில்
இடக் கை நீட்டி
யாசித்து நிற்கிற தாடிக்காரர்
சற்று மனநிலை பிறழ்ந்தவர் –
தெரியும்.
வலக்கை விரல்களில் அவர்
ஏந்தியிருப்பது
வக்கீல் ஐயா வீட்டு
வளர்ப்புப் புறா ஒன்று உதிர்த்த
புத்தம் புது இறகு –
தெரியும் அதுவும்.
தெரியாதது
நீங்களோ நானோ
குனிந்து பொறுக்காத ஒன்றை
அவருக்கு எடுத்துக் கொள்ளத் தோன்றிய
அற்புதம் குறித்து.

2 Comments on “வண்ணதாசன் கவிதை”

  1. ‘தெரியாதது…….’ என் என ஆரம்பித்து படித்து முடிக்கும் போது மாயம் ஒன்று நிகழ்கிறது மனசுக்குள்.

Comments are closed.