அழகியசிங்கர்
திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஆஞ்ஞைப்படி பாடநூல் கழக நிதியிலிருந்து 450 பிரதிகள் எல்லா நூல் நிலையங்களுக்கும் நவீன விருட்சம் வாங்குவதற்கு ஆணை வந்துள்ளது. ஜனவரி 2022 லிருந்து டிசம்பர் 2022 வரை. விருட்சம் போல் பல சிற்றேடுகளுக்கும் இது மாதிரி வாங்குவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக விருட்சம் இலக்கிய இதழிற்குத் தமிழக அரசின் நூலகங்களுக்கு வாங்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நான் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே சிறுபத்திரிகைகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக அரசு மேற்கொண்டுவரும் பணிகளை மனமாரப் பாராட்டுகிறேன் தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் இப்பணியைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
தமிழ், தமிழக வளர்ச்சி, தமிழின முன்னேற்ற நலத்திட்டங்கள் பெரும்பாலும் திமுக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டு, பயனாளிகளாகத் தமிழ் மக்கள் உள்ளனர். தமிழ்ச் சிறு பத்திரிகைகளுக்கு உதவுகின்ற இந்த மகத்தான திட்டம் “நவீன விருட்சம்” வளர்ச்சிக்கும் நிச்சயம் எதிர்பாராமலேயே கிடைத்தப் பேருதவியாகும். தங்கள் விடாமுயற்சி, மனந்தளராமல் தன் சொந்த உழைப்பு, நிதி ஆதாரத்தில் நடத்திவரும் இந்த இதழ் மென்மேலும் வளர்ச்சிகாண இதுபோன்ற ஆதரவு பயனுள்ளதாகும். நல்வாழ்த்துகள்.
👏👏👏👏👏👏