
பக்கத்தில் எது நின்றாலும்
பிடித்துக் கொண்டு
மேலேறுகிறது கொடி
அருகில் எது இருந்தாலும்
பிடித்துக் கொண்டு
விடுகிறது பாக்டீரியா
கணினிகளை கைது
செய்யும் வைரஸ்கள்
எதிரில் எவர் இருந்தாலும்
ஏமாற்றத் துடிக்கும் மனிதர்
மறு புன்னகை வீசி விட்டாலே
காதல் சொல்லும் இளைய சமூகம்
புத்திமதி யார் சொன்னாலும்
தூக்கி எரிந்து பேசும் குழந்தைகள்
வருவது எவராக இருந்தாலும்
கையூட்டு வாங்கி விடும் அதிகாரிகள்
இலவசங்களை அளித்து
அரியாசனம் ஏற நினைப்போர்
எல்லா நாளுமே
எதிர்மறை செய்தி சொல்லும்
நாள் இதழ்கள், ஊடகங்கள், திரைப்படங்கள்
நமது எல்லையைத் காக்கும்
வீரர்களின் மரணம்
இப்படி எது நடந்தாலும்…,
நமக்குள் நம்பிக்கை
இருப்பதால் தான் உயிர் இருக்கிறது !
அதை மட்டும் கட்டிக் காப்போம் …!
