இந்தப் புத்தகக் காட்சி முன்னிட்டு 10 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்/அழகியசிங்கர்

இதுவரை புத்தகக் காட்சியை முன்னிட்டு 10 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.

கடைசியாகக் கொண்டு வந்த இரண்டு புத்தகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

ஒரு புத்தகம் ரேவதி பாலுவின் நீலப் பல்லும் வத்திக் குச்சியும் என்கிற சிறுகதைத் தொகுப்பு.

இரண்டாவது புத்தகம் ஒரு கதை ஒரு கருத்து தொகுதி 2 என்கிற கட்டுரைத் தொகுப்பு. இப்புத்தகம் நான் எழுதியது.


ரேவதி பாலு ‘ரஸவாதி’ என்ற சென்ற தலைமுறை சேர்ந்த எழுத்தாளரின் மூத்த புதல்வி. பல சிறுகதைகள் பரிசுப் பெற்ற கதைகளாக எழுதி உள்ளார். பல பிரபலமான பத்திரிகைகளில் அவர் கதைகள் வந்துள்ளன.

அவருடைய 14 சிறுகதைகள் கொண்ட தொகுப்பை எழுதி உள்ளார். 106 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.120 ஆகும்.

ஒரு கதை ஒரு கருத்து என்ற தலைப்பின் கீழ் ஏற்கனவே தொகுதி 1 என்ற புத்தகத்தை ஏற்கனவே கொண்டு வந்துள்ளேன். இது இரண்டாவது தொகுதி. இதில் இன்னும் சில 17 கதைகளைப் படித்து விட்டு அலசியிருக்கிறேன். 117 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் ரங.110தான்.

விருட்சம் ஸ்டால் எண் 17ல் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்திருந்து வாங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.