போலீஸ் ஸ்டேஷன்

அழகியசிங்கர்

ஒருமுறை நானும் மனைவியும் அடையார் கேட் ஓட்டல் வழியாக வந்து கொண்டிருந்தோம்.
நான் மெதுவாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.

அப்போது பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் டபக்கென்று மனைவியின் பர்ஸ்ஸைப் பறித்துக்கொண்டு டூ வீலரில் பறந்து விட்டார்கள்.

மனைவி கத்த நான் கத்த எங்கள் கத்தல்களை யாரும் பொருட் படுத்தவில்லை.

பின்பு போலீசில் புகார் கொடுத்தோம்.

நான் வசிக்குமிடம் மாம்பலம். இந்தச் சம்பவம் எங்கே நடந்ததோ அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில்தான் புகார் கொடுக்க வேண்டும் என்றனர் மாம்பலத்திலிருக்கும் போலீஸ் அதிகாரி.