நான்மணிக்கடிகை/ மா கோமகன்

“பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும்
முன்னவாம் முன் அறிந்தார்கட்கு என்னும்
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்
அவர் இல்லார் செய்யும் வினை”

விளக்கம்:

  1. ஒரு செயலை தொடங்கும் முன் ஆராயாதவர்களுக்கு அதன் துன்பம் தொடங்கிய பின் தெரியும்
  2. ஆராய்கிறவர்களுக்கு அவை தொடங்கும் முன்னமே தெரியும்
  3. ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்களுக்கு பொருளின் மீது மேலும் மேலும் அவா உண்டாகும்
    4 பற்றில்லாதவர்கள் செய்யும் அறச்செயல் கெடாது.

One Comment on “நான்மணிக்கடிகை/ மா கோமகன்”

Comments are closed.