காதலும் கொரோனாவும்/நாகேந்திர பாரதி

வேலைகள் செய்வதில்
விருப்பம் இருக்காது
செய்யும் வேலையும்
சிறப்பாய் இருக்காது

படுத்தே இருக்கப்
பிடிக்கும் மிகவும்
எழுந்து நடந்தால்
ஏதோ நடக்கும்

சும்மா இருத்தல்
சுகமென்று சொன்னார்
சும்மா இருத்தல்
சோகமென்று தெரியாதோர்

என்னமோ செய்யும்
எதுவும் புரியாது
எப்போது மாறும்
என்பதே நம்பிக்கை

எத்தனை நாட்கள்
எத்தனை மாதங்கள்
காதலும் கொரோனாவும்
கடந்து போனாலும்