நான்மணிக்கடிகை/ மா கோமகன்

“மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்

முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகர் நீர்ப்

புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் நிலத்து இயல்புங

வானம் உரைத்து விடும்”

விளக்கம்:

  1. தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பால் அறிவிப்பான்.
  2. ஒருவன் மன விருப்பத்தை அவன் முகமே காட்டிவிடும்.
  3. வயலின் தன்மையை உழவன் அறிவித்து விடுவான்.
  4. நிலத்து மக்கள் இயல்பை அந்திலத்தில் பெய்யும் மழை அறிவித்து விடும்.