பசுமை/ —நாகேந்திர பாரதி

கனவுகளாய் இருந்தே
கலைந்து போனவை

கண்ணீரில் கரைந்து
காய்ந்து போனவை

காலத்தின் கோலத்தில்
கலந்து போனவை

எல்லாமே பசுமையாய்
இதயத்தின் ஆழத்தில்

இப்போதும் இருப்பதால்
இனிமை ஆனவை