
இன்று குரல்களின்
ஓசையிலிருந்து விடுபடுகிறேன்
நான் சொற்களின் காதலி என்றாலும்
கடைசி மிடறு தீர்ந்துபோகும்முன்
அர்த்தங்களை பருகிவிடுகிறேன்
மெளனம் விரிவாகையில்
விடுபடலின் கயிர்
விழிகளுக்குப் புலப்படும்
விவரிக்க வார்த்தைகள் போதாது
உள்நிலைக்குள் பொழியும்
மழையின் சப்தத்தை
மொழிபெயர்க்க இயலாது
தன்னிலை மறந்த
கணங்களில் நிறைவுதான்
அநித்ய வாழ்வின் பேரருள்
வெயில் மழை அடர்பனி
காலங்களில் மெளனமான
பிரார்த்தனைகள் சில
பித்தேறிய மனதினை
சமன்நிலைப்படுத்துகிறது
இந்த நொடியின் பூவெடுத்து
மாலையாக்குகிறேன்
பிரபஞ்ச வெளிக்குள்
துருவ நட்சத்திரமானபின்…
உனக்கு சூடூவேன் பூர்ணா!
