09.03.2022 – புதன்
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: புத்தகக் காட்சியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள் போலிருக்கிறது?
அழகியசிங்கர் : ஆமாம். ஜெகன் : எப்படி இருந்தது?
மோகினி : எனக்குத் தெரிந்தவரைச் சிறப்பாக இருந்தது என்றுதான் கூற வெண்டும்.
அழகியசிங்கர் :ஆரம்பத்தில் டல். சனி ஞாயிறுகளில் கூட்டம்.
மோகினி : அதிகமாக விற்ற புத்தகங்கள்..
அழகியசிங்கர் : என் புத்தகங்கள்தான். ‘அப்பாவின் அறை’, ‘அஞ்சலட்டைக் கதைகள்’, ‘அசோகமித்திரனும் நானும்’ என்ற மூன்று புத்தகங்களும் சிறப்பாகப் போயிற்று.
ஜெகன் : காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இருந்தீர்கள்.
அழகியசிங்கர்: இரண்டு நண்பர்களின் தன்னலமற்ற உதவியால் என்னால் சமாளிக்க முடிந்தது.
ஜெகன் : புத்தகங்கள் வாங்கினீர்களா?
அழகியசிங்கர் :வாங்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் வாங்கும்படி ஆயிற்று.
மோகினி : முக்கியமான நிகழ்ச்சியாக நீங்கள் கருதுவது.
அழகியசிங்கர் : எஸ்.ராமகிருஷ்ணன், மகுடேசுவரனைப் பார்த்தது.
மோகினி : பெரும்பாலான ஸ்டால்கள் காலியாக இருந்தன.
அழகியசிங்கர் : ஆமாம். என் ஸ்டால் பக்கத்திலிருந்தது நீலம் ஸ்டால். அந்த ஸ்டாலில் கூட்டம் தாங்க முடியவில்லை. எதிரில் உள்ள ஸ்டாலில் கூட்டமே இல்லை.
ஜெகன் : புத்தகங்களைப்பற்றி முகநூலில் எழுதினீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். புத்தகங்கள் பற்றி எழுதியதால் புத்தகங்கள் விற்க முடிந்தது.
மோகினி : இந்தப் புத்தகக் காட்சியில் கடினமாக நீங்கள் நினைத்தது என்ன?
அழகியசிங்கர் : வயிறுதான். அதை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தேன். இன்னொன்றும் சொல்ல வேண்டும். புத்தகக் காட்சி போகிற வழி. ஒரே டிராபிக். ஜாக்கிரதையாகப் பார்த்துப் போகாவிட்டால் ஆபத்தில் போய் முடியும்.
மோகினி : புதுமைப்பித்தன் புத்தகத்தை ரூ.150க்கு விற்றார்களே?
அழகியசிங்கர் : ஆமாம். போட்டிப்போட்டுக்கொண்டு விற்றார்கள். இன்னொரு பதிப்பகமும் சேர்ந்துகொண்டு ரூ.100க்கு புதுமைப்பித்தனை விற்றார்கள். அது மட்டுமல்ல ஜெ.பிரான்சில் கிருபாவின் ‘கன்னி’ என்ற நாலல் 100 ரூபாய்க்குக் கிடைத்தது.
ஜெகன் : புத்தகங்கள் வாங்கி விட்டீர்கள்..அடுத்தது என்ன?
அழகியசிங்கர். படிக்க முயற்சி செய்ய வேண்டும். படிப்போம். எழுதியது இரவு 10.38
புத்தகம் திருட்டுப்போனதைப் பற்றிச் சொல்லவேயில்லியே!