வண்ணதாசன் கவிதை

நான் இன்று ஒரு நாய்க்குடை.
குவிந்துகிடக்கும் கட்டுமான ஜல்லிக்குள்
மழைக்கு ஒதுங்கி நுழையும்
ஒரு கிழட்டுப் பாம்பு.
மார்புக் காம்பில்
மழைத்துளி விழ
மல்லாந்து படுத்திருக்கும் பெண்.
சிதையில் பிணம் எரிய
மழையில் நனைந்தசையும்
இடுகாட்டு இருக்கலம் பூ.
மழை நிரம்பிய சாக்கடை நீரில்
இழுத்துச் செல்லப்படும்
காலற்ற பிளாஸ்டிக் பொம்மையின்
மாறாத முகச் சிரிப்பு.
நான் இன்று நான் அல்ல,
மழையின் மாறு வேடம்.
%
2013