எதிரெதிர்

பானுமதி.ந

பார்த்து விட்டேன் அவனை

வேலியோரம் ஏதோ போகிறது

நிச்சலனமாகத் தாண்டிப் போகிறான்

பல்லி, ஓணான், பச்சோந்தி, பாம்பு

வேலி தாண்டிப் போவது எதுவோ?

வால் சுழற்றி  திரும்பும் அதன் பார்வை

அவனும் அப்படி எண்ணியிருக்கலாம்.

வேலிகள் அகழிகளாக

பல்லிகள் முதலைகள் ஆகலாம்.