10.10.2021
அழகியசிங்கர்
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : உங்களுக்குச் சக்தி கிருஷ்ணசாமி விருது கிடைத்துள்ளதா?
அழகியசிங்கர் : ஆமாம். இன்று தான் அந்த விழா நடந்தது. முதன் முதலாக சைதாப்பேட்டையில் இருக்கும் மகாத்மா காந்தி நூல் நிலையத்திற்குச் சென்றேன்.
ஜெகன் : விழா கேடயம் கிடைத்ததா?
அழகியசிங்கர் : ஆமாம். இதெல்லாம் நடத்துவது கடினம்.
மோஹினி : திரு ஆர் நடராஜ் மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், திரு ரமணன் பொறுப்பாசிரியர் கல்கி இணைய இதழ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச்செய்தார்கள்.
அழகியசிங்கர்: ஆமாம். நானும் பேசினேன். சரியாகப் பேசினேனா என்று தெரியவில்லை. ஆனால் சைதை துரைசாமி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தாரென்றால், நான் தெரு என்ற கதையைப் பற்றிச் சொல்வதாக இருந்தேன்.
ஜெகன் : கூட்டம் எப்படி இருந்தது
அழகியசிங்கர் : சிறப்பாக இருந்தது. நண்பர்களைச் சந்தித்தேன். அதுதான் முக்கியம்.
மோஹினி : கேடயத்தை எங்கே வைத்தீர்கள்.
அழகியசிங்கர் : மனைவியிடம் கொடுத்தேன். கொலுவில் வைத்துவிட்டார். கொலு பொம்மையாக அது மாறி விட்டது. இந்த முறை மகாத்மா காந்தி நூல் நிலையத்திற்குப் போய் தமிழ் நூல்களைப் பார்த்தேன்.
ஜெகன் : இதுவரை போனதில்லையா?
அழகியசிங்கர் : இல்லை.
மோஹிணி : இன்று டெய்லியில் போஸ்டிங்க அதிகமாகப் போடவில்லை என்று நினைக்கிறேன்.
அழகியசிங்கர் : ஒரு நாளைக்கு ஆறுக்கு மேல் போஸ்டிங் இட வேண்டுமென்று நினைக்கிறேன்.
ஜெகன் : குறைந்தது 200 பேர்களாவது பார்க்கிறார்கள்.
அழகியசிங்கர் : ஆமாம்..
மோஹினி : நாளை சந்திப்போம்.
அழகியசிங்கர் : ஓகே.
மனையழகு நூலகம்
கையழகு புத்தகம்
வினையழகு திருத்தம்
சொல்லழகு சுருக்கம்
மனஅழகு அடக்கம்
எனப்பழகு; நிறையும்
போதும்
யார் இறந்த செய்தி வந்தாலும் வருந்துகிறேன்
அது நானாக இல்லையென்று
மேற்கண்ட தக்கதாயின் வெளியிடுக
Congratulations