புத்தகம் என்பது/ தமிழன்பன்

பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாக முடியாது
பத்து
நதிகளோடு பழகி
நீங்கள்
ஒரு நதியாக முடியாது
பத்துப்
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள்
பதினோராவது புத்தகமாகப்
படிக்கப் படுவீர்கள்.
•••
பிழையான நூல்களைப்
படிப்பவன்
பிழைகளை எப்படித்
திருத்துவான்?
கடலில் மூழ்கியவன்
கரையில் இருப்பவனோடு
எப்படிப் பேசுவான்?
அப்படித்தான்.
•••
படிப்பது
மறந்து போகிறது என்பதற்காகப்
படிப்பதை
மறந்து விடாதே.
படிப்பதை மறக்காமல் இருந்தால்
படிப்பதும்
மறந்து போகாது.
•••
கண்ணை
மூடிக்கொண்டு பயணம்
போவதும்
எண்ணத்தை மூடிக்கொண்டு
படிப்பதும் ஒன்றுதான்.
•••
பொங்கலுக்குப்
புத்தாண்டுக்குப்
பிறந்த நாளுக்குப்
புத்தாடை வாங்குவது போல்
புத்தகம் வாங்கக் கூடாதா?
•••
புத்தகங்கள்
எழுதுங்கள், இல்லாவிட்டால்
புத்தக மாயிருங்கள்.
ஒன்று ……
படிக்க வேண்டும்
இல்லாவிட்டால்
படிக்கப்பட வேண்டும்.
•••
புத்தகங்களைத்
திற
அவை உன்னைத்
திறக்கும்.
•••
பிறக்கும் போதும
இறக்கும் போதும்
வாய்ப்பில்லை
இருக்கும் போதே
கொஞ்சமேனும் படித்து

(தகவல் : ஆர்.கந்தசாமி )