மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

தானே, ஏப். 16

மஹாராஷ்டிராவின் தானேயில், காலை உணவு வழங்காத மருமகள் மீது, மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற் றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானேயின் ரபோடி பகுதியில் வசிப்ப வர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல், 76. இவரது 42 வயது மருமகள், நேற்று முன்தினம் காலை 11:30 மணி வரை அவருக்கு உணவு மற்றும் தேநீர் வழங்கவில்லை .


இதனால் ஆத்திரம் அடைந்த பாட்டீல், தன் கைத்துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுள்ளார். குடும்பத்தில் உள்ள மற் றவர்கள், காயமடைந்த மருமகளை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாட்டீலின் மற் றொரு மருமகள் போலீசில் புகார் அளித்தார். இதை யடுத்து, பாட்டீல் மீது கொலை முயற்சி உள் ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.