12.10.2021
அழகியசிங்கர்
அழகியசிங்கர் : நேற்று இரவு 11.30 ஆகிவிட்டது. அதனால் ஆசிரியர் பக்கம் எழுதாமல் தூங்கப் போய் விட்டேன். ஒரு நாளாவது இந்த இணைய இதழில் ஆசிரியர் குறிப்பு இல்லாமல் வரக்கூடாது என்று தோன்றுகிறது.
ஜெகன் : ஆசிரியர் குறிப்பு என்றால் என்ன வெறும் அரட்டையா?
அழகியசிங்கர் : அப்படி ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
மோகினி : எல்லாம் லிட்டரேச்சராக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. அரட்டையாகக் கூட இருக்கலாம்
ஜெகன் : நானும் அப்படித்தான் சொல்கிறேன்.
அழகியசிங்கர் : தினமும் ஆசிரியர் பக்கம் எழுத முயற்சி செய்யலாம்.
மோகினி : இந்த வருடம் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரைப் பற்றித் தெரியுமா?
அழகியசிங்கர் : தெரியாது. அப்துல் ரஸக் குருனா என்ற பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இனிமேல்தான் அவரைப் பற்றி விஷயங்களைத் தேடிப்பிடிக்க வேண்டும்.
ஜெகன் : ஏன் எத்தனையோ எழுத்தாளர்களைப் பற்றி நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
அழகியசிங்கர் : இந்திய அளவிலே பல மொழிகளில் எழுதக்கூடிய சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி நமக்குத் தெரியாது. அவர்களுடைய புத்தகங்கள் தமிழில் வந்தாலும் நாம் படித்ததில்லை.
மோஹினி : அங்கே ஏன் போக வேண்டும். தமிழில் வெளிவந்த எத்தனைப் புத்தகங்கள் உங்களுக்குத் தெரியும்.
அழகியசிங்கர் : முழுக்கத் தெரியும் என்று சொல்வதற்கில்லை மிகக் குறைவான புத்தகங்களையே நாம் வாங்கிக் குவிக்கிறோம். படித்து மகிழ்கிறோம்.
ஜெகன் : அதுதான் முடியும்.
அழகியசிங்கர் : சமீபத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ஆர் ராஜகோபாலன் எழுதிய இயந்திர மாலை என்ற கதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டு உரையாடினோம்.
மோஹினி : இப்போது எழுதுபவர்களுக்குத் தெரியாது.
அழகியசிங்கர் : யாருக்கும் தெரியவில்லை. நான்தான் அவரைப் பற்றி சொல்ல வேண்டியிருந்தது.
ஜெகன் : இதுமாதிரி எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் யாருக்கும் தெரியாமலேயே இருக்கிறார்கள்.
அழகியசிங்கர் : அவர்களை எல்லோருக்கும் தெரியப் படுத்துவது என் நோக்கம்.
மோஹினி : ஆசிரியர் பக்கம் ஒவ்வொருநாளும் ஒன்றரைப் பக்கம் இருப்பது நல்லது. முடிந்து விட்டது.
அழகியசிங்கர் : நன்றி
ஆசிரியர் பக்கத்தில் சுவாரசியமான ஓர் உரையாடல் மூலம் கருத்துக்களைப் பகிரும் உத்தி வெகு நன்று. இன்னும் நாளிதழில் ‘சொல் விளையாட்டு’ போன்ற பகுதிகளைச் சேர்க்கலாம்.
‘குறுக்கு நெடுக்கு எழுத்துப் போட்டி’ கூட சேர்க்கலாம்.