செ.புனிதஜோதி கவிதை

நடந்தும் செல்லும்
பாதையில்
கடக்க முடியா
பள்ளங்களில்
நீண்ட வானத்தையும்
கிளைப்பரப்பி விரிந்து
நிற்கும் மரத்தையும்
ஒருசேரத் தாண்டிய
மகிழ்ச்சியில்
குழந்தைமனம்
எட்டிப்பார்த்து சிரித்துவிட்டு
கடக்கிறது
மழைக்காலங்களில்