அழகியசிங்கரின் இரண்டு என்பா கவிதைகள்

என்பா 79

பிள்ளையார் மணிமாலை

பார்க்கும் இடமெல்லாம்
பிள்ளையார் மயம்
பிள்ளையாரை வாழ்த்துகிறேன்
மனமுருகிக் கும்புடுகிறேன்
நூறு என்பாமாலை
எழுதக் கைகொடுக்கட்டும்
என்பாய நமஹ நமஹ

என்பா 80

எல்லோரும் பேசுகிறார்கள்
எல்லோரும்
எழுதுகிறார்கள்
ஆனால் பேசுகிறவர்கள்
எழுதுவதில்லை எழுதுபவர்கள் பேசுவதில்லை
பேச்சு திறமை.
எழுத்து உன்னதம்.
அறிந்தவர் யார் நண்பரே!