
இது அடைக்கலம் தேடி அல்ல…
ஒரு நற்பேறின் குறியீடாய்
ஒரு சீனத்துச்சின்னம்…
நம்மிடம் இல்லாதது எவ்விடம்
இருக்கிறது…
எதையும் ஏற்றுக்கொள்ளும் மனம்
விலகிச்செல்வது எப்புள்ளியில்…?
ஒருசெழிப்பின் குறியீட்டை உங்கள் வீடுகளில்
நிலைநிறுத்துவதன் மூலம் …
நீங்கள்செழிப்படைந்து விடுவீர்களானால் …
உழைப்பு முன்நிறுத்தும் வாழ்க்கை நம்பிக்கை இழக்கிறது…
ஆயினும் ஏதேனும் ஒன்றைச்செய்தால் வாழ்வின்
துயரம் விடுபடும் என்று எண்ணும் மனங்கள் பெருகும்
நிலையில்….
எத்தனை அறங்களை கூவிப்பார்த்தென்ன….
நம்பிக்கை கைஉயர்த்தி நிற்கிறது வேறுவழியின்றி
.


Super
சமநிலைப் பார்வை. நம்புவோர்க்கு உழைப்பையும் கூறி ….நம்பிக்கையையும்..ம் …ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்.