லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை

அவர் மரணம் அடைந்தார்
பேருந்துகள் வழக்கம் போல ஓடுகின்றன
இவர் ஒருமுறை காலமானார்
எல்லோரும் அலுவலகங்களுக்கு சென்றார்கள்
பிரமுகர் முக்தியடைந்தார்
குழந்தைகள்
மூன்றாம் நேரத்து உணவை உண்ணத் தொடங்கினார்கள்
ஞானி இறந்து தொலைத்தார்
அன்றாடம் அன்றாடமாகவே இருந்தது
எதுவும்
முடிவடையவில்லை

இதனை இருந்து பார்ப்பதற்கு
இறந்தவர்களுக்குத்தான் வாய்க்கவில்லை
அவர்கள் பாவம்
என்னவெல்லாம் நினைத்திருந்தார்களோ