நவஜீவன்
தகனமேடைத் தொழிலாளி
இறந்து போனான்;
ஆயிரம் தாய்தந்தையர்க்குக்
கொள்ளிவைத்த பிள்ளை;
அவன் வாரிசுக்குச் சொத்தாய்க் கிடைத்தது
பிணம் எரிக்கும் வேலை.
***
ஆழ்கடலில் முத்துக் குளித்தவன்
மூழ்கி மரித்தான்
மதுக்குப்பியில்.
*****
கோடிட்ட இடங்களை நிரப்பக் கேட்டு
கையில் தந்த கேள்வித்தாள்__
வாழ்க்கை.
*****
நகைமுரண் நிறைந்த
நாடகமே வாழ்க்கை;
தோற்றத்துக்கு நாயகன் வேடம்
ஆனால் வாய்த்தது
கோமாளிப் பாத்திரம்.
*****
காலை முதல் மாலைவரை
ஓய்வறியாக் கடும் பயணம்;
ஆனாலும் போகவேண்டும்
மறுபாதி தூரம்
மலைவாயில் முதுசூரியன்.

மிகவும் அருமை
அருமை😊👌